×

சேலத்தில் நள்ளிரவில் தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் மர ஆலை உரிமையாளர் வீட்டில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். வீட்டினுள் இருந்த கார்த்திக், புஷ்பா, மகேஷ்வரி மற்றும் சிறுவர்களான சர்வேஷ், முகேஷ் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.  கார்த்திக்கின் சகோதரர் அன்பழகன் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாடியில் தூங்கிக்கொண்டிருந்த அன்பழகனின் பெற்றோர் மற்றும் மகள் சவுமியா ஆகியோரை லேசான காயங்களுடன் தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர். மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Salem , Salem, fire, casualties
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை