×

குட்கா பதுக்கி வைத்த 3 குடோன்களுக்கு சீல்: மூவர் கடைக்காரர்கள் கைது ; ரூ.10 லட்சம் பொருட்கள் பறிமுதல்

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் உள்ள மேலக்கோட்டையூர், கண்டிகை அகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து, தாழம்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மேலக்கோட்டையூரை சேர்ந்த பீர் முகம்மது (36), பாலமுருகன் (50), ரத்தினமங்கலத்தை சேர்ந்த திவாகர் (24) ஆகியோர், பல்வேறு இடங்களில் கிடங்குகள் அமைத்து, அங்கு குட்கா பொருட்கள் பதுக்கிவைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி, அங்கு பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா மற்றும் பான் மசாலாப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், 3 குடோன்களுக்கும் சீல் வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ₹10 லட்சம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடைக்கார்கள் 3 பேரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Tags : shopkeepers ,Seal , Gutka hoarding, 3 coupons, seal, three shopkeepers, arrest, Rs 10 lakh items, confiscated
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...