×

பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வுக்கு ஆலோசனை கூட்டம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், பயனாளிகள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், பயனாளிகள் தேர்வு குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 38 ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர். அதில், ஒன்றிய ஆணையர் ஸ்டாலின் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி வரவேற்றார். கூட்டத்தில், தமிழக அரசின் பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யும் முறை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவர் (நிர்வாகம்) செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : meeting ,Green Homes Scheme , Green Homes Project, Under, Beneficiary Selection, Consultative Meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...