×

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: அம்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 11வது தெருவை சேர்ந்தவர் வேதாச்சலம். இவர், 2011-2016ம் ஆண்டு வரை அம்பத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். தற்போது அமமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது 3வது மகன் அரிகிருஷ்ணன் (39). இவருக்கு சர்மிளாதேவி (30) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்மிளாதேவி, தனது 2 மகன்களுடன் கொளத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், அரிகிருஷ்ணன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை அரிகிருஷ்ணன் அவரது படுக்கை அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. இதையடுத்து, தந்தை வேதாச்சலம் கதவை தட்டி உள்ளார். ஆனாலும், அவர் கதவை திறந்து வெளியே வரவில்லை. இதனால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அரிகிருஷ்ணன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தற்கொலை செய்து கொண்ட அரிகிருஷ்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். மேலும், அவருக்கு சரியான வேலை இல்லை. இதனால், அவரது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மனைவியும் இவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்த அரிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : AIADMK ex-MLA's ,suicide , AIADMK, son of former MLA, hanged and committed suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை