×

2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா

சென்னை: மாநகரில் 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 9 பேருக்கு நேற்று ெகாரோனா தொற்று உறுதியானது. சென்னை மாநகரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை மாநகராட்சி விஜயலென்ஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி உட்பட 2 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 9 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதையடுத்து சென்னை மாநகரில் நேற்று வரை 2,271 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் உட்பட 10 பேர் நேற்று குணமடைந்து பணிக்கு திரும்பினர். அந்த வகையில் நேற்று வரை மொத்தம் 1,865 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

Tags : inspectors ,Corona , 2 inspectors, 9 per person, Corona
× RELATED மாநிலம் முழுவதும் 57 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு