×

மகளை கொன்று தந்தை தற்கொலை: புதுகை அருகே சோகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வயது முதிர்வால் மாற்றுத்திறனாளி மகளை கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பனங்குளம் கிழக்கு கிராமம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் செல்லையா (70). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகள் சாந்தி (46). மாற்றுதிறனாளியான இவர் தந்தை பாதுகாப்பில் இருந்து வந்தார். செல்லையாவுக்கு வயதாகி விட்டதால், மகளை கவனிக்க முடியவில்லை. தனக்கு பின் மகளை யார் பார்த்து கொள்வார்கள் என்று கவலைப்பட்ட அவர், மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

நேற்றுமுன்தினம் இரவு மகளுக்கு குருணை மருந்தை சோற்றில் கலந்து கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி வயிற்று வலியால் சாந்தி அலறியதை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களிடம் விஷம் சாப்பிட்டு விட்டதாக செல்லையா கூறவே, இருவரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு தந்தையும், மகளும் அடுத்தடுத்து இறந்தனர்.


Tags : suicide ,Budugai , Daughter killed, father commits suicide, suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை