×

இ.எம்.ஐ.க்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை செப்டம்பர் 10க்கு ஒத்திவைப்பு

டெல்லி: இ.எம்.ஐ.க்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை செப்டம்பர் 10க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இ.எம்.ஐ செலுத்த ஒத்திவைக்கப்படும் காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 வரை கடன் தொகையை கட்டாதவர்களின் கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.

மேலும், இருப்பினும் கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு, கடன், வட்டி சுமை அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.



Tags : EMI ,Supreme Court ,Case , EMI, Case, Interest, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...