×

கொரோனா முகாமில் பெண் தற்கொலை? - சென்னை தனியார் கல்லூரியில் பரபரப்பு...!!! சி.சி.டி.வி. பதிவுகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை!!!

சென்னை:  சென்னை மதுரவாயில் அருகே கொரோனா நோயாளி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயிலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. 40 வயதுடைய இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி இருந்ததன் காரணமாக பரிசோதனையாது மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து செல்விக்கு கடத்த 1ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அவர் மதுரவாயிலில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்துவதற்காக அழைத்துச்செல்லப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியானத்திலிருந்தே அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செல்வி கொரோனா முகாமிலிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது தவறி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மிகுந்த மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவின் பதிவுகளை கொண்டு கொலையா? தற்கொலையா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இவரது மகனுக்கும் கொரோனா தொற்றானது ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரும் அதே தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்து வருகிறார். இதனால் அவருடைய மகனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags : suicide ,camp ,College ,Corona ,Chennai ,investigation ,CCTV Police , Female suicide , Corona camp,Chennai Private College ,CCTV ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு