சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்துக்கு அருகே உள்ள மையத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.