×

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை!!!

சென்னை:  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு காணொளி காட்சி மூலம் தலைமை செயலகத்திலிருந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள சூழலில், வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது. மேலும்  இரட்டை பதிவுகள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், அவர்களின் இல்லத்திற்கு சென்று, அதனை சரிபார்த்தல் உள்ளட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, தேர்தலுக்காக சிறப்பு முகாம்கள் அமைத்து வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்குதல், மற்றும் திருத்தம் செய்தல் போன்ற ஏற்பாடுகளும் மேற்கொள்ள வேண்டும். மேலும் தேர்தல் தொடர்பாக அரசு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனையில் ஈடுபட வேண்டும். தற்போது, இதுகுறித்தும் ஆலோசனையானது மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.  

இதனையடுத்து வரைவு வாக்காளர் பட்டியலானது நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து, முழுமையான வாக்காளர் பட்டியலானது ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும். இந்நிலையில் அந்த பணிகளை செயல்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் தற்போது ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.

Tags : Satyapradasaku ,Tamil Nadu ,District Election Officers ,Chief Electoral Officer ,district election officials ,Tamil Nadu Satyapradasaku , Chief Electoral Officer , Tamil Nadu, Satyapradasaku , district election officials ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...