×

சுதந்திரத்தை விரும்பும் அனைத்து நாடுகளையும் தூய்மையான வலையமைப்பில் சேர அமெரிக்கா அழைப்பு..!!

வாஷிங்டன்: இந்திய லடாக் எல்லையில் கடந்த ஜூன் 15ம் தேதி சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து தேச பாதுகாப்பு நலன்களை கவனத்தில் கொண்டு மத்திய அரசு டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.  இதனையடுத்து, தற்போது பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை தொடந்து பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமெரிக்க செயலாளர் கீத் க்ராச் மற்ற நாடுகளை தூய்மையான வலையமைப்பில் சேர அழைப்பு விடுத்து உள்ளார். இந்தியா ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட  சீன செயலிகளை தடை செய்துள்ளது. சுதந்திரத்தை விரும்பும் அனைத்து நாடுகளையும் நிறுவனங்களையும் தூய்மையான வலையமைப்பில் சேருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்று கிராச் கூறினார். சீன செயலிகள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு உருவிளைவிப்பவை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை 5 ஜி தூய்மையான வலையமைப்பு  திட்டத்தை ஏப்ரல் 29 அன்று வெளியிட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ முன்னதாக, அமெரிக்க அரசு, தனது தயாரிக்கப்பட்ட தூய்மையான நெட்வொர்க் திட்டத்தை சீனத் தயாரிக்கப்பட்ட செல்போன் பயன்பாடுகள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி விரிவுபடுத்துவதாகவும், அதே நேரத்தில் நம்பத்தகாத சீன செயலிகளை ஆப் ஸ்டோர்களில் இருந்து தடை செய்ய அமெரிக்க மொபைல் கேரியர்கள் மற்றும் தொலைபேசி தயாரிப்பாளர்கள் விரும்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : countries ,United States , Cleanliness, Networking, USA, Call
× RELATED எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல்,...