சென்னை: ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற சென்னை மீனவர்கள் 10 பேரின் கதி என்ன ஆனது என மீனவர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 48 நாட்களாகியும் கரை திரும்பவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மீனவர்களை மீட்க அரசு மெத்தனம் காட்டுவதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.