ஈரோடு: சத்தியமங்கலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடம்பூர் மலைப்பாதையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையினால் மல்லியம்மன்கோயில் அருகில் அருவி போல் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மழை வெள்ளம் குறையும் வரை கடம்பூர் மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.