×

11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வெப்ப சலனம் நீடித்து வருவதால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று, முண்டியம்பாக்கம் 150 மிமீ மழை பெய்துள்ளது. காமாட்சி புரம் 110 மிமீ, நிலக்கோட்டை 100 மிமீ, பாடலூர், நீடாமங்கலம் 80 மிமீ, திருச்சுழி, தாளவாடி, கொள்ளிடம் 70 மிமீ, விழுப்புரம் 60 மிமீ, மானாமதுரை, அரவக்குறிச்சி, திருச்சி விமான நிலையம், வேடசந்தூர், மூலனூர், சாத்தூர் 50 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வளி மண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும். சென்னையில்பொதுவாக மேக மூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.


Tags : districts , 11 District, Heavy rain
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...