பெரம்பூர்: தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள நாராயணதேவன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி (42). விசாரணை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்பு மனநலம் சற்று பாதிக்கப்பட்டதால் திருப்பூர் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவின்படி கோயம்புத்தூரிலிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் 5வது வார்டு அருகே மரத்தில் திடீரென புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார்.