×

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரியில் சார்பு நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள்நீதிமன்றங்களை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். உயர் நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் எனவும்,  நீதிமன்றங்களில் நாளொன்றிற்கு 3 முதல் 5 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றங்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது ஏற்புடையதல்ல, கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும். ஆந்திர, தெலுங்கானா அரசுகள் போல ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags : Lawyers , Lawyers, demonstration
× RELATED நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்