காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது. அர்ச்சகர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40,000 லஞ்சம் வாங்கிய செயல் அலுவலர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரி என்பவரிடம் அர்ச்சகர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.50 லட்சம் லஞ்சம் சரவணன் கேட்டுள்ளார்.