சென்னை: பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கிய சட்டப்பிரிவை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாத தலைமைச் செயலாளர், டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.