×

திண்டிவனம் அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ரவுடிகள்: 2 பேர் கைது

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டிவனம் அருகே பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் குப்புசாமி என்பவரின் மகன் சுரேஷ். இவர் தமது நண்பர்களுடன் சேர்ந்த திண்டிவனம்-மரக்காணம் தேசிய நெடுஞ்சாலையில், பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, சுரேஷ் மற்றும் அவரது நண்பர் விஜயரங்கனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராமானுஜம் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ரவுடிகள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  தற்போது அதிகமாக பரவி வரும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நிகழ்வதால் அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் பலரும் தொற்றுக்கு பலியாகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இதுபோன்ற அத்துமீறிய செயல்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Tindivanam Two , cutting cake , Tindivanam
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை