×

தயாரிப்பாளர் சங்க மருத்துவ காப்பீடு பிரீமியம் செலுத்த வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு  உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து, தேர்தலை நடத்த  உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை  ஜூலையில் நடத்த உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சோலையன், குருசங்கர், ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், தயாரிப்பாளர்கள் நல அறக்கட்டளையில், தயாரிப்பாளர்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய்  தொகையை காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும், உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டியுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நேற்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நல  அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்த ஏதுவாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கிக் கணக்கை  கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதியளித்து  உத்தரவிட்டார்.

Tags : Electoral Officer ,Producer ,Manufacturer ,Association , Manufacturer, Association, bank account,Icord ,Order
× RELATED வாக்கு சதவீதம் குறித்து காலை 11...