×

ஆதனூர் அருகே திமுக பிரமுகர் படுகொலை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (35), திமுக பிரமுகர். இவர் நேற்று இரவு ஆதனூர் - ஊரப்பாக்கம்  சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், இவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி  சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட  கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Adanur DMK ,Adanur ,assassination , Near, Adanur, DMK ,official, assassination
× RELATED சென்னையில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு..!!