சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களில் நேற்று முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னையில் உள்ள மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்கள் நேற்று முதல் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
2ம் தேதி(இன்று) முதல் இணைய வழி அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இலவச மற்றும் கட்டண வழி முன்பதிவு சீட்டை https://tnhrce.gov.in/eservices/dharshanbooking_index.php?tid=1&catcode=6 என்ற இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்..