×

கொலை கும்பலிடம் இருந்து தப்பிக்க வீட்டில் பதுக்கிய 4 வெடிகுண்டுகள் பறிமுதல்: அதிரடியாக நான்கு ரவுடிகள் கைது

சென்னை: வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ரவுடியின் வீட்டில் இருந்து 4 வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, 4  ரவுடிகளை கைது செய்து விசாரிக்கின்றனர்.சென்னை கேளம்பாக்கம் ஜோதி நகரில் ரவுடி அசோக்குமார் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள்  நிலுவையில் உள்ளன. இந்நிலையில்  கடந்த 25ம் தேதி அசோக்குமாரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதற்காக தனது நண்பர்களுக்கு  திருப்போரூர் அருகே சென்னேரி வனப்பகுதியில் 28ம் தேதி இரவு மது விருந்து அளித்தார். பின்னர், அசோக்குமாரை வீட்டில் விடுவதற்காக விக்கி (எ)  வினோத்குமார் தனது பைக்கில் அழைத்து சென்றார். திருப்போரூர் அருகே சென்றபோது, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு,   கீழே விழுந்து வெடித்து 2 பேரும் காயமடைந்ததும் தெரிய வந்தது.இதில் காயமடைந்த விக்கி (எ) வினோத்குமார் சென்னை ஸ்டான்லி அரசு  மருத்துவமனையிலும், அசோக்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையில் அசோக்குமார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதை தொடர்ந்து, அவரை திருப்போரூர்  போலீசார் கைது செய்தனர். பின்னர், 10 மணியளவில் அவர் தங்கிய கேளம்பாக்கம் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.அங்கு, மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் முன்னிலையில் வெடிகுண்டு நிபுணர்கள், அசோக்குமார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 வெடிகுண்டுகளை  பாதுகாப்பாக மீட்டு, மண் நிரப்பிய வாளியில் வைத்து, கீரப்பாக்கம் கல்குவாரிக்கு எடுத்து சென்றனர். நீதிமன்ற உத்தரவு பெற்று, அந்த 4  வெடிகுண்டுகளும் செயலிழக்க செய்யப்படும் என தெரிவித்தனர்.இதையடுத்து, குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக் தவிர,  செங்கல்பட்டை சேர்ந்த அன்வர் (31), ஆரோன் (30), ஆகாஷ் (32) ஆகியோரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து அவர்களிடம்  விசாரிக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவு பெற்று, பறிமுதல் செய்யப்பட்ட 4 வெடிகுண்டுகளும் செயலிழக்க செய்யப்படும்.



Tags : rowdies ,house ,murder gang ,Escape ,home , Escape, murderous ,bombs, Four ,rowdies, arrested,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...