×

சென்னையில் வரும் 11ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை: மாநகர காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு சிட்டி போலீஸ் விதி 1888-ன் படி கடந்த 27ம் தேதி முதல் வரும் 11ம்  தேதி நள்ளிரவு வரை போராட்டங்கள், பேரணி, ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்த தடை  விதிப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை  முழுவதும் நேற்று முதல் வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை பொது இடங்களில் 4 பேருக்கு மேல் ஒன்று கூட கூடாது என்றும் தடை  விதிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒன்று கூடினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது 144 சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது  செய்யப்படுவார்கள் என்று மாநகர காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Tags : meetings ,announcement ,Chennai ,Municipal Police , 11th, Chennai Demonstration, ban,Municipal, Police ,Notice
× RELATED மோசமான வானிலை மபியில் தங்கினார் ராகுல் காந்தி