சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் வருகின்ற செப்.14ம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமனித இடைவெளியை பின்பற்றி கலைவாணர் அரங்கில் கூட்டத் தொடரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.