டெல்லி: மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உருவப்படத்துக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். ராணுவ மருத்துவமனையில் இருந்து ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்த வர உள்ளனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சகர்கள், கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவதற்காக வருகின்றனர். பிரணாப் உருவப்படத்துக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்த ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.