×

மாணவியிடம் பாலியல் பலாத்காரம் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் வெங்கப்பாக்கம் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சத்யா (30) என்ற வாலிபர் மாணவி பள்ளிக்கு சென்று வரும்போதெல்லாம் அடிக்கடி வழியில் மடக்கி தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது முதல் அந்த மாணவி வீட்டிலேயே இருந்துள்ளார். இதை பயன்படுத்தி சத்யா பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.  பெற்றோர்கள் சம்பவம் குறித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாலிபர் சத்யா மீது புகார் கொடுத்துள்ளனர். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags : Student ,teenager , Student, rape, teenager, arrested in Pokcho Act
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...