×

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மற்றும் விமானங்கள் மூலம் வரும் பயணிகளுக்கு:


* வெப்ப பரிசோதனை கட்டாயம்.
* வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.
* வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களில் அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டும் பி சி ஆர் சோதனை செய்யப்படும்.
* தொழில்முறை பயணம் மேற்கொண்டு 72 மணி நேரத்திற்குள் திரும்புவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வெளி நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள்:

* வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயம்.

* வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் 96 மணி நேரத்திற்கு முன்னதாக பிசி ஆர் சோதனை செய்து அதன் முடிவு நெகட்டிவாக இருக்க வேண்டும்.
* கப்பல் மற்றும் விமானம் மூலமாக வரும் பயணிகள் அறிகுறி இல்லாமல் இருந்தால் 14 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும்.
* வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அழைத்து வரக்கூடிய பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி சி ஆர் சோதனை எடுக்கப்படும்.
* அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே பிசி.ஆர் சோதனை செய்யப்படும்.

Tags : travelers ,Government of Tamil Nadu , Government of Tamil Nadu,issued new guidelines,travelers , abroad
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...