டெல்லி : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.