×

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு: டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்...!!

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 9ம் தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மருத்துவர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு உடல் நிலை கடும் பின்னடைவு அடைந்து இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருகிறார் என்றும் அவருக்கு நுரையீரல் தொற்று மேலும் தீவிரம் அடைந்து உள்ளதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Pranab Mukherjee ,President ,Recession ,Delhi Army Hospital Former ,Hospital , Former President, Pranab Mukherjee, Health, Recession, Hospital, Information
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...