சென்னை : உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்கு மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் தொடக்கம் ஓணம் திருவிழா என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,பிரியப்பட்ட எல்லாவருக்கும் பொன் ஓண அசம்சஷகள் என்று மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்க்கை மீண்டும் வண்ணமையமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் மாறட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.