×

இது தீப்பிடித்த காடு..பறவைகளே! பத்திரம்..: ஊரடங்கு தளர்வுகள் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்

சென்னை: ஊரடங்கு தளர்வுகள் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, நாடு முழுதும் மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டது. மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மே, 31 வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, ஜூன், 1ம் தேதி முதல், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு இன்றுடன் முடிகிறது. இதையடுத்து, நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள், செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.

7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் படிப்படியாகத் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க் கொல்லி நுழைந்துவிடக் கூடாது. மீண்டும் இயங்கப்போகும் வாழ்வியல் வெளியில் கடும் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக்கொள்வீர் பெருமக்களே! இது தீப்பிடித்த காடு..பறவைகளே! பத்திரம், என கூறியுள்ளார்.


Tags : forest ,Vairamuthu , Curfew, Relaxation, Poet Vairamuthu
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...