×

நாசிக்கில் உள்ள அரசு அச்சகங்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..: ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்!

நாசிக்: நாசிக்கில் உள்ள அரசு அச்சகங்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் மத்திய அரசாங்கத்தின் அச்சகம் உள்ளது. இந்த வளாகத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம் தவிர, பாதுகாப்பு அச்சகமும் உள்ளன. கரன்சி அச்சகத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. பாதுகாப்பு அச்சகத்தில், ரெவின்யூ ஸ்டாம்ப், முத்திரை தாள்கள், பாஸ்போர்ட், விசா போன்றவை அச்சாகின்றன. நாள் ஒன்றுக்கு இங்கு சுமார் பல்வேறு மதிப்புகளைக் கொண்ட 17 மில்லியன் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. இரண்டு அச்சகங்களிலும் சுமார் 4,000 நிரந்தர ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இன்று முதல் நான்கு நாட்கள்(வியாழக்கிழமை வரை) இரண்டு அச்சகங்களும் மூடப்படுகிறது. இந்த நான்கு நாட்களில் அச்சடிக்கப்பட வேண்டிய 7 கோடி நோட்டுகளை , ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக வேலை பார்த்து அச்சடிக்க நாசிக் அச்சக நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.ஒரே நாளில் தொற்றில் இருந்து 60,868 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் 971 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.79% ஆக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 76.61% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,government ,Nashik , Nashik, Government Press, Corona, Rupee notes,Money press
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!