×

வாலிபருக்கு சரமாரி வெட்டு

புழல்: செங்குன்றம் அடுத்த காந்திநகர், எம்ஜிஆர் 7வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார்(22). இவர் செங்குன்றத்தில் உள்ள செல்போன் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 6 மணியளவில் வீட்டின் வாசலில் தனது மோட்டார் சைக்கிளை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தினேஷ்குமாரின் தலை, தோள்பட்டை, இரண்டு கைகள் உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் சராமரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில், பலத்த காயமடைந்த தினேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை வெட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : teenagers , Teenager, volley, cut
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு