×

புதுச்சேரியில் இனி முழு ஊரடங்கு கிடையாது

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசு அன்லாக்-4 என்று விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும். 8 மணி வரை அனைவரும் வீட்டிற்கு செல்ல வேண்டும். இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம். செப்.1ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை மத்திய அரசு அறிவித்தபடி இரவில் ஊரடங்கு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், நாராயணசாமி தனது டிவிட்டரில் பக்கத்தில், ‘செப்டம்பரில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Pondicherry , Puducherry, no longer a full curfew, is no more
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...