புதுச்சேரி: புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் முழுவதும் இரவு நேரத்தில் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் நாராணயசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நகரம் மற்றும் புறநகரில் ஒரு வார காலத்துக்கான ஊரடங்கு மறுபரிசீலனை செய்யப்படும் என கூறினார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு என மத்திய அரசு அறிவித்த நிலையில் புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.