×

கூடலூர் அருகே நள்ளிரவில் வீட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

கூடலூர்:  கூடலூரை அடுத்த பாடந்துறை உளிமஞ்சோலை பகுதியில் வசிப்பவர் செம்மண்(42). விவசாயி.  இவர் மனைவி, குழந்தையுடன் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் திடீரென 3 காட்டு யானைகள் இவரது வீட்டின் ஒரு பகுதியை சேதப்படுத்தின. இதனையறிந்த செம்மண் வீட்டிலிருந்தபடியே சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அருகில் இருந்வர்கள் வந்து, காட்டு  யானைகளை  விரட்டியத்துள்ளனர். பின்னர் அவர்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள வேறொரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

நேற்று காலை தகவலறிந்து வந்த வனத்துறையினர் சேதமடைந்த வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வெளியே இழுத்து போட்டு யானைகள் சேதப்படுத்தியதோடு, பீரோ, கட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளன என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் அந்த வீட்டில் தற்போது வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ பகுதிக்கு வந்த கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக அருகில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடத்தில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.



Tags : house ,Kudalur ,Cuddalore Break , Cuddalore, Break, wild ,elephant, roars
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...