×

மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு!: சொந்த ஊரில் மக்கள் கண்ணீர் அஞ்சலி..!!

குமரி: மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்து வருகிறார்கள். கொரோனா தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டுவரப்பட்டது.

காலை 6 மணி முதலே அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கட்சி பேதமின்றி, மத பேதமின்றி காலை முதலே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பூங்கோதை, மனோ தங்கராஜ், அகஸ்டின், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்களும் அவருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

அதேபோல கொடிக்குன்னில் சுரேஷ் கேரளாவில் இருந்து தனது அஞ்சலியை செலுத்தினார். தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்து வருகின்றனர். இருப்பினும் ஏராளமான கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் காத்திருப்பதினால் அவரோட உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

தொடர்ந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர். குடும்ப இறுதி சடங்குக்கு பின்னர் பொதுமக்கள் சிறிது நேரம் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன் பிறகு  அவரது வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுக்குப்பாறை தேரிவிளை என்ற இடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Tags : Congress ,funeral ,hometown ,Vasantha Kumar ,Vasanthakumar MP Body , Casanthakumar, Kanniykumari, Corona virus
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...