×

கொரோனா வைரஸ் ஆண்டவன் கொடுத்த தண்டனை: அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறுகிறார்

கோபி: ‘‘கொரோனா வைரஸ் என்பது ஆண்டவன் கொடுத்த தண்டனை; அதை ஆண்டவன்தான் நிவர்த்தி செய்ய வேண்டும்’’ என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியிருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கவுந்தப்பாடியில் ரூ.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நேற்று வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் என்பது ஆண்டவன் கொடுத்த தண்டனை; அதை ஆண்டவன்தான் நிவர்த்தி செய்ய வேண்டும். அதுவரை பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். காவிரி ஆறு மட்டுமல்ல; மற்ற நீர் நிலைகளில் சாய ஆலைக்கழிவுகளை கலந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கே.சி.கருப்பணன் கூறினார்.

Tags : KC Karuppanan ,Lord , Corona, the sentence given by the Lord, says Minister KC Karuppanan
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்