×

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தமிழக பாஜ துணை தலைவர் பதவி

சென்னை: கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 25ம் தேதி டெல்லியில் பாஜ தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில் பாஜவில் இணைந்தார். தொடர்ந்து அவர் பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர். கட்சியில் இணைந்த அண்ணாமலைக்கு பாஜவில் தற்போது பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழக பாஜவின் மாநில துணை தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை நியமிக்கப்படுகிறார். அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். பாஜகவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகனை சந்தித்து அண்ணாமலை நேற்று வாழ்த்து பெற்றார். அவரை எல்.முருகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags : Annamalai ,Former IPS ,vice president ,BJP ,Tamil Nadu , Former IPS officer Annamalai, Tamil Nadu BJP vice-president, post
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...