×

இன்று முதல் சபரிமலையில் சத்யா விருந்து

திருவனந்தபுரம்: திருவோண பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் ,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசித்து செல்வர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் 2 நாட்கள் ‘திருவோண சத்யா’ எனும் விருந்தும் வழங்கப்படும். இந்த ஆண்டு திருவோண பண்டிகை நாளை (31ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி சார்பிலும், நாளை தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பிலும் ‘திருவோண சத்யா’ விருந்து வழங்கப்படுகிறது. இதில், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
செப். 2ம் தேதி இரவு நடை சாத்தப்படுகிறது.


Tags : Sabarimala , From today, Sabarimala, Satya Feast
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு