×

ஆரல்வாய்மொழியில் வீடுகளில் அட்டகாசம் 20 குரங்குகள் கூண்டில் சிக்கின

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை உச்சிமாகாளியம்மன் கோயில், வடக்கூர் முருகன்கோயில் சந்திப்பு, கிருஷ்ணன்புதூர், ரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இங்குள்ள வீடுகளில் புகுந்து உணவுகள் உள்ளிட்ட பொருட்களை தூக்கி செல்கின்றன.  விளைநிலங்களில் புகுந்து தேங்காய், வாழை உள்ளிட்டவற்றை சேதப்படுத்துகின்றன. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதால் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க வடக்கூர் உச்சிமாகாளியம்மன் கோயில் பகுதியில் கூண்டு வைத்தனர்.

இன்று காலை அந்த கூண்டில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கி இருந்தன. வனத்துறையினர் வந்து அந்த குரங்குகளை பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். இந்த பகுதியில் அட்டகாசம் செய்து வரும் அனைத்து குரங்குகளையும் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். மீண்டும் அவை இங்கு வராத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Aralvaymozhi ,houses , Aralvaymoli, 20 Monkeys
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...