×

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் செப்டம்பர் 4ம் தேதி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபுவும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை பழிவாங்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இடமாற்றம் செய்தவர்களை மீண்டும் ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கு மாற்றாததால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags : Radhakrishnan ,High Court , High Court orders,Health Secretary Radhakrishnan, appear in person
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...