×

குருவராஜபாளையம் அருகே சாலையோரம் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு: ஆபத்து வரும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாதனூர்: குருவராஜபாளையம் அருகே திறந்து ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துைள கிணற்றை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணைக்கட்டு தாலுகா சின்னப்பள்ளி குப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து  பந்தேரிப்பாளையம் செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையோரத்தில் ஊராட்சிக்கு  சொந்தமான ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணறு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து, திறந்து ஆபத்தான நிலையில்  உள்ளது.
இதனால், அவ்வழியாக குழந்தைகளுடன் செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும், ஆழ்துளை கிணற்றில்  அமைக்கப்பட்டுள்ள மின்வயர்கள் அப்படியே விடப்பட்டுள்ளது.

 இதனை, அங்கு ேமய்ச்சலுக்காக வரும் கால்நடைகள், சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கடித்தால் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்து திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைத்து அதன் மேல்பகுதியை மூடி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்  என்று  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Guruvarajapalayam , Roadside , Guruvarajapalayam,action , danger ,comes
× RELATED குருவராஜபாளையம் பகுதியில் சாலையோரம்...