×

அருமை நண்பர் வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது: ரஜினிகாந்த்

சென்னை: அருமை நண்பர் வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வசந்தகுமாரின் குடும்பத்தாருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்ளார். வசந்தகுமாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று ரஜினிகாந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆர்வமும், துடிப்பும், சிரிப்பும், பம்பரமாக சுழன்று பணியாற்றும் பண்பும் அவருக்கே உரித்தான குணநலன்கள் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியர் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

நடுத்தர குடும்பங்களின் வலியறிந்து வியாபாரத்தை வளர்த்தவர் வசந்தகுமார் என்று கமல் கூறியுள்ளார். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றி இருந்தோரையும் முன்னேற்றியவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மிக அற்புதமான மக்கள் சேவையாளர் வசந்தகுமார் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சித்தப்பா நீங்கள் இல்லை என்பதை மனது நம்ப மறுக்கிறது என்று தமிழிசை தெரிவித்துள்ளார். கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது.

அமைதியான பேச்சு, சிரித்த முகம் இவற்றிற்கு சொந்தக்காரர் வசந்தகுமார் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான வணிகர், அரசியல்வாதி வசந்தகுமார் என்று ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.



Tags : Vasantha Kumar ,demise ,Rajinikanth ,Corona , Vasanthakumar, Corona, Rajinikanth
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...