தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ரூ.110 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. தஞ்சையில் அரசுப்பணிகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் ரூ.70 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டம் ஜனவரியில் நிறைவடையும் என்று அவர் கூறியுள்ளார். கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.