மதுரை: மணல் கடத்தலை தடுப்பது குறித்து தமிழக அரசின் நிலைபாடு என்ன என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் துணையுடன் மணல் கடத்தப்படுவதாக ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.