ராஞ்சி : நீட் மற்றும் ஜேஇஇ தேர்வெழுத மாணவர்கள் ஆர்வமாக உள்ளதாக கூறிய மத்திய அரசின் வாதம் எனக்கு புரியவில்லை என முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். நீட் மற்றும் ஜேஇஇ தேர்வெழுத லட்சக்கணக்கான மாணவர்கள் ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்துள்ளனர் என்பதனால் அவர்கள் ஆர்வமாக இருப்பதாக அர்த்தமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார், மேலும் கோடிக்கணக்கான மக்கள் ஆயுள் காப்பீடு எடுத்துள்ளனர், என்பதற்காக அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள் என்று அர்த்தமா ? என்றும் தெரிவித்துள்ளார்