சென்னை: இஐஏ வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட்டு கருத்துகள் தெரிவிக்க 60 நாள் அவகாசம் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரைவு அறிக்கையின் பிரிவுகளை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக பொது நல மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியிட்டால் தான் தமிழக மக்களால் ஆட்சேபங்களை தெரிவிக்க இயலும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.