×

ஒரே நாளில் 60,177 பேர் குணமடைந்தனர்... இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 25.83 லட்சத்தை தாண்டியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33.87 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 61ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 77,266 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,87,501 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,057 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  61,529 ஆக உயர்ந்தது.
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 60,177 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 25,83,948 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,42,023 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!

மும்பை : சிகிச்சை பெறுவோர் :178561 ; குணமடைந்தோர் :     531563; இறப்பு : 23444

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :52364; குணமடைந்தோர் :343930; இறப்பு :6948

டெல்லி : சிகிச்சை பெறுவோர் :13208 ; குணமடைந்தோர் : 1500277; இறப்பு : 4369

கேரளா : சிகிச்சை பெறுவோர் 22737 ; குணமடைந்தோர் :43757; இறப்பு :     267

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :85006 ; குணமடைந்தோர் : 219554; இறப்பு : 5232

ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :94209 ; குணமடைந்தோர் : 295248; இறப்பு : 3633

Tags : survivors ,Corona ,India , India, Corona, Number, Healer, Rise
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...